தமிழக செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்

வெங்கத்தூர் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

தமிழக அரசு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கடைக்காரர்கள் தொடர்ந்து கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

அப்போது 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த 32 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 3 கடைக்காரர்களுக்கு ரூ.62 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு