தமிழக செய்திகள்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வயதான அனைவருக்கும் நியாயமான பென்சன், உரிய மருத்துவ வசதி, இருப்பிடம், குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் ராமசாமி, கருப்பன், மணி, செல்வராஜ், மணிராஜா, காளியப்பன், இளங்கோவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகள் 1.1.2020 முதல் 18 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும். தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு 94 மாத பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்