தமிழக செய்திகள்

மக்கள் குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து 36 மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் மனுக்களை விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) குமார் (இணையவழி குற்றப்பிரிவு) மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT