தமிழக செய்திகள்

பெரியகுளம் முதல் எழுவனம்பட்டி வரைரூ.3½ கோடியில் சாலை அமைக்கும் பணி

பெரியகுளம் அருகே ரூ.3½ கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

தினத்தந்தி

பெரியகுளம் முதல் எழுவனம்பட்டி வரை 12 கிலோ மீட்டர் தூரம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3 கோடியில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வடுகப்பட்டி அருகே நடைபெற்ற சாலை அமைக்கும் பணியை இந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின், உதவி பொறியாளர் அனுசுயா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து