தமிழக செய்திகள்

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் நிரந்தர தடை - தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை

முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகம் துணை போனால் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நாளை மறுதினம் தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுமையடைந்துள்ள நிலையில், அனைத்து அதிகாரிகளும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத உள்ளனர்.

இந்த நிலையில் பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது என்றும் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பருவத்தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் தேர்வு எழுத நிரந்தர தடைவிதிக்கப்படும் என்றும் தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.

மேலும் காப்பியடித்தால் சம்பந்தப்பட்ட மாணவரின் தேர்வை ரத்து செய்து ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகம் துணை போனால் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து