கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பிப் 7 முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணைக்கு அனுமதி

பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலமாக மட்டும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்தது. இதையடுத்து நீதிபதிகள் நடத்திய கூட்டத்தின் முடிவில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்கள் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்படும் என தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

மேலும், வழக்கின்போது ஒருதரப்பினர் நேரடியாகவும், மற்றொரு தரப்பினர் காணொலி வாயிலாகவும் பங்கேற்கும் சூழல் உருவானால், அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகி வாதாடும் மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட்டிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சங்கம், வழக்கறிஞர் அறைகள் கொரோனா கட்டுப்பாட்டுடன் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு