தமிழக செய்திகள்

இன்று முதல் குற்றாலம் அருவிகளில் இரவிலும் குளிக்க அனுமதி..!

குற்றாலம் அருவிகளில் இரவிலும் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து