தமிழக செய்திகள்

முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு - ஜனவரி 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ராஜேஷ்தாஸ், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சட்டம்-ஒழுங்கு முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் கடந்த ஜூன் 16-ந்தேதி தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ராஜேஷ்தாஸ், மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6-ந்தேதி அறிவிக்கப்படும் என கோர்ட்டு அறிவித்தது. இந்நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு கோர்ட்டில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு கோர்ட்டுக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன், ஜனவரி 2-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்