தமிழக செய்திகள்

பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தினத்தந்தி

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கரூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம், ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பகுதிநேர கணினி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பிரதாப். இவர் கரூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். கடந்த 12-ந் தேதி மதியம் 1 மணியளவில் கரூர்-ஈரோடு சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்தார். தாறுமாறாக காரினை ஓட்டிவந்து விபத்தினை ஏற்படுத்திய ஆசிரியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்