தமிழக செய்திகள்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரியில் விசாரணை

கர்நாடக அரசு சார்பில் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கர்நாடக அரசின் மனுவை ஜனவரி இறுதி வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். 

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்