தமிழக செய்திகள்

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஆவணங்களை ஒப்படைத்தது.

தினத்தந்தி

சென்னை,

கிண்டியில் கவர்னர் மாளிகை முன்பு கடந்த அக்டோபரில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை கைதுசெய்த போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்ட நிலையில், ரவுடி கருக்கா வினோத் மீது மூன்று பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஒப்படைத்தது.  

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்