தமிழக செய்திகள்

2-வது கட்டமாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்; இன்றும், நாளையும் நடக்கிறது

தமிழகம் முழுவதும் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது

தினத்தந்தி

சென்னை,

கடந்த நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியினை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது. தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக நவம்பர் மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்காக மட்டும் 13 லட்சத்து 46 ஆயிரத்து 907 விண்ணப்ப படிவங்கள் அளிக்கப்பட்டன. அதில் 21-ம் தேதி 5 லட்சத்து 43 ஆயிரத்து 523 மனுக்களும், 22-ம் தேதி 8 லட்சத்து 3 ஆயிரத்து 380 மனுக்களும் பெறப்பட்டன.

இந்த நிலையில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்கள் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில் பொது மக்கள் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

21 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும் 2 இடங்களில் பெயர் இருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கும் பணிகள் இந்த முகாம்கள் வழியாக செய்யப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து தமிழகம் முழுவதும் ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை