தமிழக செய்திகள்

'ஜாலியன் வாலாபாக்' படுகொலை குறித்த புகைப்பட கண்காட்சி

பழனி அருங்காட்சியகத்தில் ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலை குறித்த புகைப்பட கண்காட்சி வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

பழனியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வரலாறு சார்ந்த புகைப்படங்கள், பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றை பழனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் என பலர் பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த மாதம் சுதந்திர போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் 'ஜாலியன் வாலாபாக் படுகொலை' குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கியது. இதை பழனி பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், பக்தர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் கூறுகையில், இந்த புகைப்பட கண்காட்சி இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 26-ந்தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், தியாகிகளின் வரலாறு சார்ந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவர்கள் இதை கண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு