திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வார விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேவேளை, கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.