தமிழக செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

தினத்தந்தி

\

தாராபுரம் அரசு மருத்துவமனை சார்பில் பொதுசுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் 100 வது ஆண்டு நாளை முன்னிட்டு பொன்னாபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆ.தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்ட துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ் 100-ம் ஆண்டு நினைவாக பொன்னாபுரம் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மருத்துவ அலுவலர்கள் ஜெயராஜ், நிவேதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சவுந்தரராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜு, நவீன், சபரிகிரிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்