தமிழக செய்திகள்

ராமநாதபுரத்தின் அவலநிலை: காலி குடங்களுடன் குடிதண்ணீரை தேடி அலையும் மக்கள்...!

ராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிளில் காலி குடங்களுடன் குடிதண்ணீரை தேடி மக்கள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வறண்ட மாவட்டம் என்று தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் அழைக்கப் பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களைவிட மழை பெய்வது குறைவாக இருப்பதோடு மட்டுமில்லாமல் குடிதண்ணீர் பிரச்சினை என்பது மிக முக்கிய பிரதான பிரச்சினையாக உள்ளது.

ஒருபுறம் வைகை அணையிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கடலில் கலந்து வீணாகி வருகின்றது. மறுபுறம் மக்கள் குடிதண்ணீருக்காக குடங்களுடன் அலையும் நிலையும் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் திருஉத்தரகோசமங்கை அருகே ஆனைகுடி சாலையில் குடிதண்ணீருக்காக மோட்டார் சைக்கிளில் தள்ளு வண்டியை இணைத்து குடங்களுடன் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீரை தேடி மக்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்