தமிழக செய்திகள்

பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ்-1 துணைத் தேர்வுகள் ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். அதனை தொடர்ந்து மே 6-ம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 94.56% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 5.44% பேர் தேர்வில் தோல்வி அடைந்தனர்.

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கால அவகாசம் விடுக்கப்பட்டது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேர்வர்கள் மாவட்ட இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ்-2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 துணைத் தேர்வுகள் ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு