தமிழக செய்திகள்

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கருதி விபரீதம்: பிளஸ்-1 மாணவி தற்கொலை

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கருதி பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

காரைக்குடி

காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை புதுவயல் பகுதியைச் சேர்ந்தவர் மாங்குடி. பெட்டிக்கடைக்காரர். இவருடைய மகள் அரியஜோதி (வயது 16). இவர் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில் அரியஜோதி தேர்ச்சி பெற்றார். ஆனாலும் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாக கருதி மனவருத்தம் அடைந்தார். இந்தநிலையில் விபரீத முடிவு எடுத்து, மின்விசிறியில் தூக்குப்போட்டு மாணவி அரியஜோதி தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை