தமிழக செய்திகள்

தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை

சென்னை அடுத்த பல்லாவரத்தில் தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது 16). இவர், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு தேவையான தண்ணீரை பிடித்து வைக்கவில்லை என்று ஜெகதீசையும், அவருடைய சகோதரனையும், அவர்களுடைய தாயார் மாரியம்மாள் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் மாரியம்மாள் வேலைக்கு சென்று விட்டார். உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றிருந்த சகோதரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஜெகதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை