தமிழக செய்திகள்

காய்கறிகளின் விலை உயர்வால் வெறிச்சோடி காணப்பட்ட போச்சம்பள்ளி வாரச்சந்தை..!

காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் போச்சம்பள்ளி வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையானது தமிழகத்தின் இரண்டாவது பெரிய வார சந்தை ஆகும். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.

முன்பெல்லாம் ரூ.100 முதல் ரூ.200 கொண்டு சென்றாலே ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கி விடலாம் என்ற நிலையில் தற்பொழுது அன்றாட தேவைக்கு கூடவாங்க முடியாமல் பொதுமக்கள் விழி பிதுங்கியுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் யாரும் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வராததால் இன்று நடந்த போச்சம்பள்ளி வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது