தமிழக செய்திகள்

சென்னையில் முககவசம் அணியாதவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை;ரூ.17¾ லட்சம் அபராதம் வசூல்

கொரோனா தொற்றின் 2-வது அலையில் இருந்து தன்னையும், பிறரையும் பாதுகாக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிக முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

எனினும் சிலர் முககவசம் அணியாமல் அலட்சியமாக சாலையில் வலம் வருகிறார்கள். இந்தநிலையில் சென்னையில் முககவசம் அணியாதவர்கள் மீது மாநகராட்சி சார்பில் அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று போலீசாரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு முககவசம் அணியாதவர்களை மடக்கி பிடித்து வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்தவகையில் போலீசார் சார்பில் கடந்த 8-ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரையில் சென்னையில் முககவசம் அணியாமல் வந்த 8 ஆயிரத்து 901 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.17 லட்சத்து 80 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத 95 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து