தமிழக செய்திகள்

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீசார்

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கினர்.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து செல்வோரை ஊக்கப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீசார் இனிப்பு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தலைமையிலான போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்து சென்ற மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அவர்களுக்கு இனிப்பு வழங்கி இதேபோல் எப்போதும் நீங்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என அவர்களை உற்சாகப்படுத்தினர்.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அதேபோல் கார்களில் சீட் பெல்ட் அணிந்து முறையாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் இனிப்பு வழங்கினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்