சென்னை,
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதியை அவரது அலுவலகத்தில் காவல்துறை துணை அணையர் தேஷ் முக் சேகர் சஞ்சய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். குற்ற தடுப்பு, போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.