தமிழக செய்திகள்

ரெயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 35 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பயணி தவற விட்ட 35 பவுன் நகையை மீட்டு ஒப்படைத்த தூய்மை பணியாளரை போலீசார் பாராட்டினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த தூய்மைப் பணியாளர் மீனாட்சி (45 வயது). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த குப்பை தொட்டிக்குள் ஒரு மணிபர்ஸ் கிடந்துள்ளது. அதை திறந்து பார்த்த மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார். அதில் தங்க சங்கிலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் இருந்தன.

இதுகுறித்து மீனாட்சி சுகாதார அதிகாரி முருகனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது உதவியுடன் தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் நகையை ஒப்படைத்தார். அதில் 35 பவுன் நகைகள் இருந்தன. இதைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சென்னையில் ஒயர்மேனாக வேலை பார்த்து வரும் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நகைகள் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு வந்த அவர், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நகைகளை பெற்றுச் சென்றார். 35 பவுன் நகையை பத்திரமாக போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மீனாட்சியை போலீசார் பாராட்டினர்.

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரெயிலின் நேரம் மாற்றம்

கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

அமெரிக்க பங்குச்சந்தையின் வக்கீல் நோட்டீசை ஏற்க அதானி சம்மதம்

சிகரெட், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி: இன்று முதல் அமல்

இன்று மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?