தமிழக செய்திகள்

குற்றாலத்தில் குரங்கு பறித்து சென்ற சாவியை நூதன முறையில் மீட்ட போலீஸ்காரர்

கார் சாவியை கால் விரலில் மாட்டிக் கொண்டவாறு குரங்கு தின்பண்டங்களை ஒவ்வொன்றாக ருசித்தது.

தினத்தந்தி

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. சுற்றுலா பயணிகளிடம் உள்ள தின்பண்டங்களை நைசாக பறித்து செல்லும் குரங்குகளும் உண்டு. நேற்று மெயின் அருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணியிடம் இருந்த கார் சாவியை நைசாக குரங்கு பறித்து கொண்டு பாறையில் ஏறி நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், அங்கு இருந்த போலீஸ்காரர் பாலமுருகனிடம் தெரிவித்தார்.

உடனே போலீஸ்காரர் அந்த பாறையில் சற்று தூரம் ஏறி நின்று, குரங்குக்கு பிடித்த அன்னாசி பழம், வடை போன்றவற்றை ஒவ்வொன்றாக கொடுத்தார். கார் சாவியை கால் விரலில் மாட்டிக் கொண்டவாறு குரங்கு தின்பண்டங்களை ஒவ்வொன்றாக ருசித்தது. இறுதியில் கொய்யாப்பழத்தை குரங்குக்கு கொடுத்ததும் கால் விரலில் மாட்டியிருந்த சாவியை கீழே போட்டது. தொடர்ந்து கொய்யாப்பழத்தை ருசித்தவாறு குரங்கு அங்கிருந்து சென்றது.

நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு சுற்றுலா பயணிக்கு கார் சாவி திரும்ப கிடைத்ததால் நிம்மதியடைந்தார். குரங்கிடம் இருந்த சாவியை நூதன முறையில் மீட்டு கொடுத்த போலீஸ்காரர் பாலமுருகனுக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டு சென்றார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா