தமிழக செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் காப்பி அடித்து சிக்கிய போலீஸ்காரர் மனைவி

திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் காப்பி அடித்தபோது போலீஸ்காரர் மனைவி சிக்கினார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 6 மையங்களில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான போட்டி தேர்வு நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் காப்பி அடித்து தேர்வு எழுத முயன்றுள்ளார்.

அப்போது தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளம்பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர்.

இவர் திருவண்ணாமலையில் பணியாற்றி வரும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி ஆவார். இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த பெண் பிட் வைத்து காப்பியடித்து எழுத முயன்ற போது சிக்கினார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து