தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் பாலியல் சீண்டல்; தி.மு.க. பிரமுகர் கைது

ராமாபுரத்தில் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் பாதுகாப்பு பணிக்காக ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் சென்றிருந்தனர். அப்போது ஒரு பெண் போலீசிடம் அங்கிருந்த கண்ணன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் போலீஸ் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணனை கைது செய்து விசாரித்தனர். அதில் கைது செய்யப்பட்ட கண்ணன் தி.மு.க. பிரமுகர் என்பதும், பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் உறுதியானது.

இதையைடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்