சென்னை
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டி.டி.வி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது தவறானது. சமஸ்கிருதம், இந்தியை திணிக்க பாரதீய ஜனதா முயற்சிக்கிறது. தமிழகத்தில்தான் வெடிகுண்டு கலாசாரம் இல்லை; ஆனால் அதற்கு தூண்டுகிறது பாஜக. ஒருமையில் பேசி தமிழகத்தில் தவறான கலாச்சாரத்தை எச். ராஜா உருவாக்குகிறார். இந்தியா முழுவதும் ஒரே மொழி என்ற நோக்கில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள்.
அரசியலுக்காக ஜெயலலிதா சிலையை அவசர, அவசரமாக வைத்துள்ளனர். என கூறினார்.