தமிழக செய்திகள்

மக்கள் தொகை தின பேச்சு போட்டி

கட்டக்குடி அரசு பள்ளியில் மக்கள் தொகை தின பேச்சு போட்டி நடந்தது.

தினத்தந்தி

வடுவூர்;

வடுவூர் அருகே உள்ள கட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு " பெண் சிசுக்கொலை தடுப்பில் சமூகத்தின் பங்கு " மற்றும் பெண் கல்வியும் மக்கள் தொகை பெருக்கமும் " ஆகிய இரு தலைப்புகளில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பி.மலர்க்கொடி தலைமை தாங்கினா. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி முத்துலட்சுமி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் குப்புசாமி, வட்டார சுகாதார புள்ளியாலர் சங்கவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பார்த்திபன், சண்முகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்