தமிழக செய்திகள்

தபால் துறை குறைதீர்வு கூட்டம்: நாளை நடக்கிறது

இந்திய தபால் துறையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்திய தபால் துறையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள பொது தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

சென்னை பொது தபால் (ஜென்ரல் போஸ்ட் ஆபீஸ்) அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் தபால் சேவைகள் குறித்த ஆலோசனைகள், குறைகள் ஏதேனும் இருந்தால் வாடிக்கையாளர்கள் நேரில் கலந்து கொண்டு அல்லது கடிதம் மூலமாக தங்கள் ஆலோசனைகள், குறைகளை தெரிவிக்கலாம் என்று சென்னை பொது தபால் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு