தமிழக செய்திகள்

10-ந் தேதி நடைபெற இருந்த கடை அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு - ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு

10-ந் தேதி நடைபெற இருந்த கடை அடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோயம்பேடு வணிக வளாக கூட்டமைப்போடு இணைந்து கோயம்பேடு வணிக வளாக திறப்பிற்கு ஆதரவாக வருகிற 10-ந் தேதி கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் த.கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வெளிமாவட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் இருப்பதால், அவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு ஆலோசிக்க முடியவில்லை. மேலும், வருகிற 12-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே, கடை அடைப்பு போராட்டத்தை தவிர்த்துவிடுமாறு அறிவுறுத்தினர்.

மேலும், முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சென்னை திரும்பியதும் அவர்களுடன் ஆலோசனை நடத்தி கோயம்பேடு வணிக வளாக திறப்பிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, வருகிற 10-ந் தேதி அறிவித்து இருந்த கடை அடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு