கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள கிரிவலப்பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில், தை மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே வருகிற 1-ந்தேதி 8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

அதன்படி விழுப்புரத்தில் இருந்து 1-ந்தேதி காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்