தமிழக செய்திகள்

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி தொடங்கியது

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதல் அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த ஜூன் 22-ந் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

இதனால் 2-வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணு உலையில் ஏற்பட்ட பழுதினை விஞ்ஞானிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12.50 மணி அளவில் பழுது சரி செய்யப்பட்டு 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 370 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு