தமிழக செய்திகள்

சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் வயர்கள்

சாலையின் குறுக்கே தாழ்வாக மின்வயர்கள் செல்கின்றன.

தினத்தந்தி

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து உட்கோட்டை செல்லும் வழித்தடத்தில் பெரியவளத்திற்கு இடையே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் ஜெயங்கொண்டம் உட்கோட்டைக்கு மினி பஸ்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுவதற்காக டிராக்டர்கள் மற்றும் தைல மர கட்டைகள் ஏற்றுவதற்கு லாரிகள் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்தநிலையில் அந்த சாலையின் குறுக்கே செல்லும் மின் வயர்கள் தாழ்வாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரி, பஸ்கள் மீது மின்கம்பிகள் உரசினால் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உயிர் பலிகளை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக அந்த மின் வயர்களை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டினர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்