தமிழக செய்திகள்

இன்று மின்நிறுத்தம்

திருக்குவளை, கீழ்வேளூர் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை தெற்கு உட்கோட்ட பிரிவு உதவி செயற்பொறியாளர் ராய்ஸ்ட்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருக்குவளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான குண்டையூர், சாட்டியக்குடி, மோகனூர், இறையான் குடி, இளிஞ்சூர், வண்டலூர், செண்பகபுரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.மேலும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளான கீழ்வேளூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், பாலாஜி நகர், மயிலாகுடி, கீழ்வேளூர், ஒதியத்தூர், ஓர்குடி, கடம்பங்குடி, அகரகடம்பனூர், ஆழியூர், கோகூர், வடகரை, மணல்மேடு, புலியூர், தேவூர், இலுப்பூர், ராதாமங்கலம், பட்டமங்கலம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

..

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து