தமிழக செய்திகள்

இன்றும், நாளையும் மின் நிறுத்தம்

பன்னியூர், பாணாவரம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சோளிங்கர் மின் கோட்டம் வெங்கடாபுரம் உபகோட்டத்தை சேர்ந்த பாணாவரம் துணை மின் நிலையத்தில் பன்னியூர் மின்பாதையில் உள்ள கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடக்கிறது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மங்கலம் காலனி, கீழ்வீராணம், புதூர், ஜி.டி.நல்லூர் மற்றும் பன்னியூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் பாணாவரம் மின்பாதையில் உள்ள கம்பங்களை மாற்றும் பணி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாணாவரம், ரங்காபுரம், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் மாங்குப்பம் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் உமாசந்திரா தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு