தமிழக செய்திகள்

பழையசீவரம், வாலாஜாபாத் பகுதியில் இன்று மின் தடை

துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காரணமாக் பழையசீவரம், வாலாஜாபாத் பகுதியில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்திலுள்ள பழையசீவரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். அதனால் பழைய சீவரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படும் மதூர், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழுச்சூர், பாலூர் மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ் ஓட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜாம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன் பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனூர், வில்லிவலம், கருக்கு பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனூர், கம்பராஜபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைபடும் என்று காஞ்சீபுரம் தெற்கு செயற்பொறியாளர் ஆர்.சி.பிரசாத் அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்