தமிழக செய்திகள்

ஒரத்தூரில் இன்று மின்தடை

நாவலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரத்தூரில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படும்.

படப்பை அருகே உள்ள நாவலூர் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக நாவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிறுவஞ்சூர், ஒரத்தூர், வடமேல்பாக்கம், ஆதனஞ்சேரி, நாட்டரசன்பட்டு, காஞ்சிவாக்கம், சாவடி, செரப்பனஞ்சேரி, வஞ்சுவாஞ்சேரி, கூழாங்கலச்சேரி, ஆரம்பாக்கம், நாவலூர், பேரிஞ்சம்பாக்கம், பணப்பாக்கம், வட்டம்பாக்கம் போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT