தமிழக செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் முடிவு

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 25ம் தேதி துவங்கிய செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் (2.05.2022) முடிவடைகிறது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்