தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் இடிந்து விழுந்த கட்டிடத்தை பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

தினத்தந்தி

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடிந்து விழுந்த கட்டிடம் மட்டுமின்றி சுற்றியுள்ள அனைத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளும் மிக மோசமான நிலைமையில் உள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. இங்குள்ள வீடுகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டிக்கொடுக்கும் வரை அவர்களை வாடகை வீடுகளில் குடியமர்த்த தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இந்த கட்டிடம் இடிந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய தரமில்லாத கட்டிடங்கள், பஸ்கள் ஆகியவற்றை முன்கூட்டியே ஆய்வு செய்து மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அரசு மக்களை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு