தமிழக செய்திகள்

கோவிலில் மின்சாரம் பாய்ந்து பூசாரி பலி

கோவிலில் மின்சாரம் பாய்ந்து பூசாரி இறந்தார்.

சமயபுரம்:

கோவில் பூசாரி

மண்ணச்சநல்லூர அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் கோவத்தகுடியில் புதிதாக கட்டியுள்ள சித்தர் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் இறந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து அங்கமுத்துவின் மகன் நந்தகுமார் (வயது 24), அந்த கோவிலின் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சென்ற அவர் மூலஸ்தானத்தை சுத்தம் செய்துவிட்டு, அங்குள்ள மின் மோட்டாரை இயக்கினார்.

சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலில் மின்சாரம் பாய்ந்து பூசாரி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு