தமிழக செய்திகள்

மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் எம்.பி.

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

மதுரை,

மணிப்பூர் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரை அண்ணாநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை சுரண்டவே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும், மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை