தமிழக செய்திகள்

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி நாளை அர்ப்பணிக்கிறார்

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே பதிக்கப்பட்ட இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) அர்ப்பணித்து வைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எண்ணெய் தொழிற்சாலைகளின் ஒருங்கிணைப்பாளருமான பி.ஜெயதேவன், சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர் (பொறுப்பு) ராஜீவ் அயிலவாடி, நிர்வாக இயக்குனர் (குழாய் பதிப்பு) எஸ்.எஸ்.சவந்த் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

இந்தியாவில் தற்சார்பு திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக சென்னை மணலியில் உள்ள பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி-ராமநாதபுரம் இடையே 143 கி.மீ.தூரத்துக்கு இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணலியில் உள்ள நிறுவனத்தில் கேசோலைன் கந்தகம் அகற்றும் யூனிட் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நிறைவடைந்த 2 திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 17-ந் தேதி (நாளை) மாலை 4.30 மணியளவில் அர்ப்பணித்து வைக்கிறார்.

காவிரி படுகையில்...

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து நாகப்பட்டினத்தில் காவிரி படுகையில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பாரத் ஸ்டேஜ் வரையறைகளுக்கு ஏற்றவாறு எம்.எஸ். மற்றும் டீசல் உற்பத்தி செய்யப்படும். மதிப்பு கூட்டு துணை பொருளான பாலிப்ரோபிலின் தயாரிக்கப்படும். இத்தகைய செயல்திட்டங்கள் மூலம் பெட்ரோலிய கெமிக்கல் சம்பந்தப்பட்ட தொழில்கள், துணை தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் பெருமளவில் உருவாகி, பெரும்பாலனோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்