தமிழக செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த வழக்கு:மின்வாரிய ஊழியருக்கு 10 ஆண்டு சிறைகிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி

ஓசூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பெண் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி வள்ளி (வயது 24). இவர் கடந்த 28.9.2019 அன்று வீட்டின் அருகில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த முள்வேலியில் கை வைத்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்த வள்ளி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

10 ஆண்டு சிறை

அதில் வள்ளியின் வீட்டிற்கு எதிரே உள்ள குடியிருப்புக்கு சென்ற மின்கம்பியை மற்றொரு வீட்டில் வசிக்கும் மின்வாரிய ஊழியர் மரியதாஸ் (49) என்பவர் அந்த கம்பியை முள்கம்பி வேலியில் படும்படியாக கட்டி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மரியதாசை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட மரியதாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதா உத்தரவிட்டார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை