தமிழக செய்திகள்

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு.!

பற்கள் பிடுங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் விசாரித்து வருகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் பற்கள் பிடுங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், எஸ்.பி. சரவணன் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான பாலாஜி சரவணன் நெல்லை மாவட்டத்தை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு