தமிழக செய்திகள்

விருதுநகர் அருகே தனியார் பஞ்சாலை வாகனம் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி

விருதுநகர் அருகே தனியார் பஞ்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பனையூர், திருச்சுழி சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து தனியார் பஞ்சாலை வாகனம், அங்கு பணிபுரியும் 22 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது பனையூர்-திருச்சுழிக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது நிலைதடுமாறிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். பின்னர் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்