தமிழக செய்திகள்

சாலை பணியாளர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

சாலை பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு உரிய தளவாடங்கள், மழை கோட், காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில் உயிர் நீத்தோரின் குடும்பத்தில் இருந்து கருணை நியமனம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர் இளங்கோவன், சங்கத்தின் மாநில பொருளாளர் தமிழ், துணை தலைவர்கள் விஜயன், ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சாலை பணியாளர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட முதுநிலை பட்டியலின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை தொலைத்தூர பணிகளுக்கு தொடர்ந்து அனுப்புவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் மயில்சாமி நன்றி கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்