தமிழக செய்திகள்

கல்குவாரிக்கு எதிராக போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தில் கல்குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, கல்குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் இன்று திருமால் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி. உதயகுமார், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து