தமிழக செய்திகள்

சாலை வசதி கேட்டு மறியல் போராட்டம்

செங்கம் அருகே சாலை வசதி கேட்டு மறியல் போராட்டம்

தினத்தந்தி

செங்கம்

செங்கத்தை அடுத்த பரமனந்தல் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர், திருவள்ளுவர் நகர், பாரியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை வசதிகள் செய்து தர வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

ஆனால் சாலை வசதி செய்யப்படவில்லை. இந்தநிலையில் சாலை வசதி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று பரமனந்தல் -குப்பநத்தம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இ

தனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்