சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
குறுவை சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், ரூ.134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், இதுவரை ஒரு பைசா கூட விவசாயிகளின் கைக்கு வந்து சேரவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
குறுவை தொகுப்புத் திட்டத்துக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கிவிட்டதாகச் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், களநிலவரமோ முற்றிலும் வேறாக உள்ளது. இயந்திர நடவு ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் குமுறி வருகின்றனர்.
அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இனியும் காகித அறிவிப்புகளால் காலத்தைக் கடத்தாமல், குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.